வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களில் இதையெல்லாம் செய்யக்கூடாது!

Date:

வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் போது எடுத்துச் செல்லக்கூடாத விடயங்கள் குறித்து வாக்காளர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளனர்.

குறித்த அறிவுறுத்தலை ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இன்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

“குடிமக்கள் செல்லும் போது நிதானமாக இருக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.காலையில் மது அருந்திவிட்டு வாக்குச்சாவடிக்குள் நுழைய முடியாமல், முடிவெடுக்க முடியாமல் திணறுபவர்கள் இருப்பதை நம் அனுபவத்தில் பார்த்துள்ளளோம்.

அத்தோடு, வாக்குச்சாவடிகளில் உள்ளவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாக்குச்சாவடிக்கு வர வேண்டும்.

மேலும், சிலர் கூரிய ஆயுதங்கள் மற்றும் சிறு கத்திகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வாக்களிக்க வரும் சம்பவங்களை நாங்கள் அனுபவித்திருக்கிறோம்.

ஒரு வேளை நீங்கள் வேலைக்குச் சென்று வாக்களிக்க செல்வீர்களானால் இது போன்ற செயல்களைச் செய்யாதீர்கள்.

எனவே இது போன்ற சிறிய சம்பவம் வாக்குச்சாவடியை சீர்குலைத்தால், அது முழு வாக்குப்பதிவு செயல்முறையையும் தடுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...