ஒற்றுமை, கருணை ஆழமான உணர்வை இதயங்களில் ஒளிரவைக்கட்டும்: பிரதமரின் தீபாவளி வாழ்த்து

Date:

– பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் தீபாவளி பண்டிகை வாழ்த்துச்செய்தி

இந்தவிழாவின் ஒளி நம் இல்லங்களை ஒளிரச்செய்வது மட்டுமல்லாமல், நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை நம் இதயங்களில் ஒளிரவைக்கட்டும்.

இருளின் மீது ஒளியின் வெற்றியைக் கொண்டாடும் நாம், கட்டமைப்பு ரீதியான பாரபட்சங்கள் மற்றும் விளிம்பு நிலைக்குள்ளாக்கப்படல் என்பவற்றுக்கு எதிராகப் போராடுபவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களை நினைவுபடுத்திக் கொள்வோம்.

அனைவரும் சுதந்திரம், கண்ணியம் மற்றும் உரித்தை அனுபவிக்கக்கூடிய ஒரு உலகைக் கட்டியெழுப்ப நாம் மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் இது.

‘வளமான தேசம் -அழகான வாழ்க்கை’ என்ற எமது அரசியல் கொள்கையின் மூலம் எங்கள் கூட்டு இலக்கானது அனைவரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும், அனைவரையும் உள்ளடக்குவதை உறுதிசெய்வதும் ஆகும்.

இந்த தீபாவளி அனைவரது வாழ்க்கையிலும் ஒளியையும், மகிழ்ச்சியையும், புதுப்பித்தலையும் தரட்டும்.

இன்று தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள, அமைதியான தீபாவளி வாழ்த்துக்கள்!

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...