கூடைப்பந்து செம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி

Date:

மாலைதீவு  கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட சுப்பர் கிண்ண கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் ஈழத்தமிழ் பெண் வீராங்கனையான பி.சிவானுஜா  இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.

மாலைதீவு கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட சுப்பர் கிண்ண கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து அணிகள் செம்பியன்ஷிப் கிண்ணத்தை வென்றுள்ளன.

இந்தநிலையில், பெண்கள் அணியில் யாழ்ப்பாணத்தை  சேர்ந்த தமிழ் பெண் வீராங்கனையான பி.சிவானுஜா பங்குபற்றியுள்ளார்.

மாலைதீவினை எதிர்த்து போட்டியிட்ட இலங்கை அணி 74:72 என்ற எண்ணிக்கையில் மாலைதீவை வீழ்த்தி  வெற்றி பெற்றது.

மாலைதீவின் மாலே நகரில் செப்டம்பர் 26 முதல் 30 வரை இந்தப் போட்டிகள் நடைபெற்ற நிலையில் நான்கு நாடுகளின் அணிகள், குறிப்பாக உலகின் வலிமையான வெளிநாட்டு கூடைப்பந்து வீரர்களுக்கிடையே இந்தப் போட்டி நடத்தப்பட்டது.

இதையடுத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற இலங்கையின் அணிகள் நாடு திரும்பியுள்ளதுடன் இலங்கை விமானப்படையின் உயரதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...