சீரற்ற காலநிலை; பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கம்பஹா, களனி, கொலன்னாவ மற்றும் கடுவெல ஆகிய கல்வி வலயங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளையும் விடுமுறை வழங்கப்படும் என மாகாண கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...