ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாடு – காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை

Date:

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஜம்மு – காஷ்மீர் சட்டசபைக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் சட்டசபை தேர்தல் நடந்தது.

இதில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி போட்டியிட்டது. இக்கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.

வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே, தேசிய மாநாடு அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஜம்மு பகுதியில் உள்ள தொகுதிகளில் பாஜகமுன்னிலையில் இருந்தது.

இறுதி நிலவரப்படி, தேசிய மாநாடு கட்சி 42 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்த கூட்டணி காஷ்மீரில் புதிய அரசை அமைக்க உள்ளது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...