தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் இன்றுடன் நிறைவு

Date:

எதிர்வரும் பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதி திகதி இன்று (08) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே, தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச மற்றும் நியதிச்சட்ட சபைகளின் அலுவலர்களும் அல்லது ஊழியர்களும் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்காமல் இருத்தல் அல்லது குறைபாடுகள் காரணமாக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படல் போன்ற காரணங்களுக்காக அரச மற்றும் நியதிச்சட்ட சபைகளின் அலுவலர்கள் அல்லது ஊழியர்கள் தேர்தல் கடமைகளிலிருந்து நீக்கப்படமாட்டார்கள்.

மேலும், தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்படாத அரச மற்றும் நியதிச்சட்ட சபைகளின் அலுவலர்கள் அல்லது ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கத் தகைமை பெறமாட்டார்கள் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறான அலுவலர்கள் அல்லது ஊழியர்கள்தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்தல் அல்லது அவ்வாறான விண்ணப்பங்களை அத்தாட்சிப்படுத்தாமல் இருக்குமாறு தாபனத் தலைவர்களுக்கும் அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தகைமை பெறாத நபர்களை தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்க தூண்டுதலாகாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...