‘உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்’: ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் நான்காவது சந்திப்பு!

Date:

‘உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்’ நிகழ்வின் நான்காவது நிகழ்வு எதிர்வரும் 10.10.2024 அன்று வியாழக்கிழமை மு.ப. 9.30 முதல் பி.ப. 1.30 வரை இடம்பெற இருக்கின்றது என்பதை ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் பின்வரும் இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதன் மூலமாக அல்லது IMO ஊடாக அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் சவூதி அரேபியாவுக்கான இலங்கையின் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களுடன் நேரடியாக உரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து சவூதி அரேபியாவில் வாழ்கின்ற சகல பிரஜைகளும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவருடன் நேரடியாகப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கில் ரியாதில் உள்ள இலங்கை தூதரகம் ‘உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்’ என்ற பெயரில் சமூகத்தை நோக்கிய ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது.

ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்தப் புதிய முன்னெடுப்பினை இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் கட்டியெழுப்பப்பட்டு 50 ஆண்டு பூரணமாவதைக் கொண்டாடுவதுடன் அறிமுகப்படுத்துகிறது.

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...