புத்தளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய நவராத்திரி திருவிழா நிகழ்வுகள் ஆரம்பம்.

Date:

புத்தளம் மன்னார் வீதியில் அமைந்திருக்கின்ற மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த நவராத்திரி திருவிழா நிகழ்வுகள் வியாழக்கிழமை (03) ஆரம்பிக்கப்பட்டன.

இந்த திருவிழாவையொட்டி தொன்று தொட்டு, முதல் நாள் உபயத்தை வழங்கி வருகின்ற புத்தளம் நடராஜ தேவர் குடும்பத்தினர் அவர்களது புத்தளம் பிரதான வீதியில் அமைந்திருக்கும் முன்னாள் வியாபார நிலையத்திலிருந்து ஸ்ரீ முத்து மாரியம்மனுக்கு பட்டு சாத்தும் பொருட்டு சீர்தட்டு கொண்டு செல்லும் நிகழ்வு வியாழக்கிழமை (03) காலை இடம்பெற்றது.

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு செல்கின்ற வழியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்துக்கும் சென்ற பக்தர்கள் அங்கு ஸ்ரீ சித்தி விநாயகரையும் வழிபட்டு விட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை செனறடைந்தனர்.

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் அதன் பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தாராம குருக்கள் தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதனையடுத்து ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அதன் பிரதம குரு அம்பலவாணன் குருக்கள் தலைமையில் நவராத்திரி திருவிழாவின் முதல் நாள் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...