புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்; சுயாதீன குழு அறிக்கை சமர்ப்பிப்பு

Date:

தரம் ஐந்து, புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களில்  ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின்  அறிக்கை, பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக  பரீட்சை திணைக்களம்  தெரிவித்துள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டைத்  தற்காலிகமாக நிறுத்தி, முறையான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதி அநுர குமார  திஸாநாயக்க அண்மையில் உத்தரவிட்டார்.

புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடாத்துமாறு பெற்றோர்கள்  ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதால், ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

எவ்வாறாயினும், புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும்  நடத்துவதில்லையென்ற, நிபுணர் குழுவின் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படாதென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர முன்னதாக தெரிவித்தார்.

எனினும், இக்குழுவின்  பரிந்துரைகளை ஆராய்வதற்காக மற்றுமொரு சுயாதீன குழுவைப் பிரதமர் அண்மையில் நியமித்திருந்தார்.

இக்குழுவின் அறிக்கையே பிரதமரிடம் தற்சமயம் கையளிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...