2024ம் ஆண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 3 வினாக்கள் வெளியான விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு கல்வி அமைச்சு மற்றுமொரு குழுவினை நியமித்துள்ளது.
கல்வியமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் கல்வியமைச்சர் ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பரீட்சை திணைக்கள அதிகாரிகள் இருவர் மற்றும் பேராசிரியர்கள் இருவர் அந்தக் குழுவில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எடுத்த தீர்மானத்திற்கமைய, இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த குழுவின் ஆய்வு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.