யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Date:

கொழும்பு  கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறை வரையான ரயில் சேவை இன்று (28) முதல் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த தகவலை பிரதி தொடருந்து பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு ரயில் புறப்பட்டுள்ளதுடன், நாளை 29 ஆம் திகதி காங்கேசன்துறையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு 10.53 இற்கு யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை வந்தடைந்து 11 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும்.

வடக்கு ரயில் பாதையில் தினமும் ரயில் பயணிக்கும் என்றும், ரயில் கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் ரயில் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நேர அட்டவணைக்கு அமைய, கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் தொடருந்து பிற்பகல் 12.38 க்கு திருகோணமலையை சென்றடையும். பிற்பகல் 1.30 க்கு திருகோணமலையில் இருந்து புறப்படும் தொடருந்து இரவு 7.59 க்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும்.

கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் ரயில்பிற்பகல் 3.15 க்கு மட்டக்களப்பை சென்றடையும். கொழும்பு கோட்டையில் இருந்து பிற்பகல் 3.15 க்கு புறப்படும் ரயில் இரவு 10.22 க்கு மட்டக்களப்பை சென்றடையும்.

மட்டக்களப்பில் இருந்து பிற்பகல் 1.40 புறப்படும் ரயில் இரவு 8.55 க்கு கொழும்பு கோட்டை ரயில்நிலையத்தை வந்தடையும்.  மட்டக்களப்பில் இருந்து இரவு 6.10 க்கு புறப்படும் ரயில் இரவு 8.55 க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...