இலங்கைக்கு பயணத் தடை விதிக்கவில்லை: அமெரிக்கத் தூதுவர் விளக்கம்

Date:

இலங்கைக்கான பயணத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் இதனை தெரிவித்தார்

அறுகம்பை பகுதிக்கு விஜயம் செய்யும் போது அமெரிக்க பிரஜைகளுக்கு அவதானத்துடன் செயற்படுமாறு மாத்திரமே அறுவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்

அறுகம்பை பகுதியில் குறிப்பிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் எச்சரிக்கை காணப்படுவதாக தகவல் கிடைத்த சந்தர்ப்பத்தில், அதனை இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்தோம்.

அத்துடன் தொடர்ச்சியாக அன்றாடம் இந்த விடயம் தொடர்பில் இலங்கை தலைமைத்துவத்துடனும் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.

எவ்வாறெனினும், இலங்கைக்கான பயண ஆலோசனை தொடர்பான சில பிழையான தகவல்கள் வெளியாகும் நிலையில் அதனை தெளிவுபடுத்த வேண்டிய தேவை தமக்கு உள்ளதாகவும் மறு அறிவிப்பு வரும் வரை அறுகம்பேக்கு பகுதிக்கு பயணிக்க வேண்டாம் அண்மையில் அறிவித்திருந்தோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மையின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...