இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்: பொலிஸ் தலைமையகம்

Date:

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் நாட்டிற்கு வருகை தருபவர்களுக்கு விசேட அவசர தொலைபேசி இலக்கமொன்றை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் இருக்கும் இஸ்ரேலிய பிரஜைகளின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் தலைமையகம் இன்று  (24) அறிவித்தலொன்றை  விடுத்துள்ளது.

அதன்படி  சுற்றுலாப் பயணியாகவோ அல்லது வேறு நோக்கத்திற்காகவோ இலங்கைக்கு வருகை தந்த இஸ்ரேலியர் ஒருவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தால், அவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு நேரடியாகத் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ என்பவரை 071-8592651 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம்.

இதுபோன்ற அச்சுறுத்தல் குறித்த விடயங்களுக்காக உங்கள் அடையாளத்தை சரிபார்க்க வேண்டியது அவசியம் என்பதால், தேவையான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...