ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை: உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபையின் அறிவிப்பு!

Date:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல  உறுமய கட்சியின் தலைவருமான உதயகம்மன்பில நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.

உதயகம்மன்பில வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கத்திலுள்ள இரண்டு அதிகாரிகளிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை கத்தோலிக்க திருச்சபை தனது மறுப்பினை உத்தியோகபூர்வமாக இன்று அறிவிக்கவுள்ளனர்.

அத்துடன் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு எதிராக உதயகம்மன்பில வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்கவுள்ளதாக அருட்தந்தை சிறில்காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம் தலைமையிலான விசாரணை ஆணைக்குழு ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையை எதிர்வரும் 28ஆம் திகதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தவுள்ளதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில நேற்றையதினம் அறிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...