கூடைப்பந்து செம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி

Date:

மாலைதீவு  கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட சுப்பர் கிண்ண கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் ஈழத்தமிழ் பெண் வீராங்கனையான பி.சிவானுஜா  இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.

மாலைதீவு கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட சுப்பர் கிண்ண கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து அணிகள் செம்பியன்ஷிப் கிண்ணத்தை வென்றுள்ளன.

இந்தநிலையில், பெண்கள் அணியில் யாழ்ப்பாணத்தை  சேர்ந்த தமிழ் பெண் வீராங்கனையான பி.சிவானுஜா பங்குபற்றியுள்ளார்.

மாலைதீவினை எதிர்த்து போட்டியிட்ட இலங்கை அணி 74:72 என்ற எண்ணிக்கையில் மாலைதீவை வீழ்த்தி  வெற்றி பெற்றது.

மாலைதீவின் மாலே நகரில் செப்டம்பர் 26 முதல் 30 வரை இந்தப் போட்டிகள் நடைபெற்ற நிலையில் நான்கு நாடுகளின் அணிகள், குறிப்பாக உலகின் வலிமையான வெளிநாட்டு கூடைப்பந்து வீரர்களுக்கிடையே இந்தப் போட்டி நடத்தப்பட்டது.

இதையடுத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற இலங்கையின் அணிகள் நாடு திரும்பியுள்ளதுடன் இலங்கை விமானப்படையின் உயரதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...