கொழும்பு, கம்பஹாவில் 03 நாள் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்

Date:

நாட்டில் கடந்த வாரம் நிலவிய கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால், மீண்டும் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ் வருடத்தின் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 41,212 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 22 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் மூன்று தினங்களுக்கு, விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இவ்வாறு டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டெங்கு நுளம்பு உற்பத்தி தொடர்பாக பொதுமக்கள் அதிக கவனம் செலுத்தவேண்டுமெனவும் தமது வீடுகள் மற்றும் நிறுவனங்களின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...

முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

16.09.1931- 16.09.2025 முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862...