நாமல் ராஜபக்சவிடம் இரண்டரை மணிநேர விசாரணை!

Date:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்து விட்டு அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கிருந்து வெளியேறும்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“வழக்கமாக, நம் நாட்டின் அரசியல் கலாச்சாரம் என்னவென்றால், அரசாங்கம் மாறும்போது, ​​​​மற்ற அரசாங்கத்தில் இருந்தவர்களை அழைத்து வந்து விசாரணை செய்வது தான்.

வரச் சொன்னால் வருகிறோம். வேண்டுமென்றே நாட்டு மக்களுக்கு பொய் சொல்லி எங்களைப் பற்றிய தவறான வியூகத்தை உருவாக்கியுள்ளனர்.

2010 முதல் 2015 வரை எனது அலுவலகத்திற்கு ஒருவர் வந்து பணம் கொடுத்துள்ளார் என கூறியே இன்று என்னை அழைத்து வந்து விசாரித்தனர்.

இது அநாமதேய முறைப்பாடு. அந்த முறைப்பாட்டின் படி பணம் கொண்டு வந்து எனது அலுவலகத்தில் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அது பற்றி என்னிடம் கேட்கப்படுகிறது” என்றார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...