சப்ரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

Date:

தீபாவளிப் பண்டிகையையிட்டு நவம்பர் 01ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பீ.ஏ.சீ.பி. பமுனு ஆரச்சி இதனை அறிவித்துள்ளார்

 

அந்த வகையில் மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணம் ஆகிய மாகாணங்களிலுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கே இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

 

நாளை (31) தீபாவளி தினம் கொண்டாடப்படுவதோடு, மறுநாள் வெள்ளிக்கிழமை (01) விடுமுறை வழங்கப்படுவதன் மூலம் இக்கொண்டாட்டத்தை வார இறுதி நாட்களுடன் இணைத்து செளகரியமாக கொண்டாட மாணவர்களுக்கு வசதியளிக்கும் வகையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த விசேட விடுமுறை தினத்துக்கு பதிலாக நவம்பர் 09 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஊவா, மத்திய மாகாண ஆளுநர்களும் இவ்வாறு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...