சர்வதேச பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்மானம்

Date:

சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான தனிப் பிரிவை உடனடியாக நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழாம் திகதி கொழும்பு சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவியொருவர் தாமரைக் கோபுரத்திலிருந்து தவறான முடிவெடுத்து கீழே விழுந்து உயிரிழந்ததையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தேசிய கணக்காய்வு அலுவலகம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் நிறுவனம் ஒன்று இல்லாத காரணத்தினால் நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியர்களின் கல்வித் தகுதி, கற்பித்தல் முறை, குழந்தைகளின் ஒழுக்கம், கட்டணம் வசூலிப்பதில் உள்ள முரண்பாடுகள், பாடத்திட்டம் உள்ளடக்காதது போன்ற பல பிரச்சினைகள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் பிரச்சினைகள் குறித்து கல்வி அமைச்சுக்கு அவ்வப்போது முறைப்பாடுகள் கிடைத்து வந்த நிலையில், இந்த விவகாரத்தை விசாரணை செய்வதற்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லாததால், சம்பந்தப்பட்ட பாடசாலையிடம் மட்டுமே அமைச்சகம் விசாரணை செய்ய முடியும்.

மேலும் தாமரை கோபுரத்தில் இருந்து தவறான முடிவெடுத்து கீழே விழுந்து உயிரிழந்த மாணவி தொடர்பில் இன்று (10) அறிக்கை சமர்ப்பிக்குமாறு சர்வதேச பாடசாலைக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் நியமிக்கப்பட்ட குழு உள்ளிட்ட அதிகாரிகள் குழு இன்று பாடசாலைக்கு செல்லவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...