சிறுவர் தினத்தில் சோகம்; தாய்லாந்தில் பேருந்து தீப்பற்றி 23 சிறுவர்கள் பலி

Date:

தாய்லாந்தில் பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து நேற்று தீப்பற்றிய விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தாய்லாந்தின் மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து பாலர் பாடசாலை சிறுவர்கள் நேற்று பேருந்தில் கல்விச் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.

பேருந்தில் 6 ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 44 பேர் இருந்தனர். இந்நிலையில்
கு கோட் நகரில் உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணியளவில் இந்தப் பேருந்து தீப்பற்றியது.

பேருந்தில் தீ மளமளவென பரவியதில் 20 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், “தொடக்க மற்றும் நடுநிலைப்  பாடசாலை மாணவர்கள் இந்தப் பேருந்தில் வந்துள்ளனர்.

தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். 16 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக் கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி விசாரித்து வருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.

பேருந்து தீப்பற்றியதை தொடர்ந்து அதன் ஓட்டுநர் வெளியேகுதித்து உயிர் தப்பினார். தலைமறைவான அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா எக்ஸ் தளத்தில்வெளியிட்டுள்ள பதிவில், “பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குஎனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்களின் மருத்துவ செலவை அரசு ஏற்கும்’’ என கூறியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...