அத்தனகல்ல தொகுதியில் கஹட்டோவிட்ட பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்கின்ற மழை காரணமாக அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தசாப்த காலமாகவே மழை பெய்கின்ற போது இப்பகுதி தொடராக வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.
இதேவேளை பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (12) மாலை 04:00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதிர தெரிவித்தார்.
இதன்படி, பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2ஆம் கட்டத்தின் கீழும், 1ஆம் கட்டத்தின் கீழும் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டம் – சீதாவக, படுக்கை, களுத்துறை மாவட்டம்- வலல்லாவிட்ட, ஹொரண, இங்கிரிய, மத்துகம, தொடங்கொட, புலத்சிங்கள, பாலிந்தனுவர, அகலவத்தை.
கேகாலை மாவட்டம் – ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, வரகாபொல, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, மாவனெல்ல, அரநாயக்க
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு – அவிசாவளை வீதியின் அஸ்வத்த சந்தியிலிருந்து ஹிகுரல சந்தி வரையிலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் அந்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.