இஸ்ரேல் பிரஜைகள் மீது தாக்குதல் திட்டம்; சந்தேகத்தின் பேரில் இருவர் கைது!

Date:

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக நம்பகமான தகவல்களுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் நேற்று (23) தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை பல நாடுகள் புதுப்பித்துள்ளன.

மேலும், தற்போதுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக இலங்கையின் சுற்றுலாத் தலங்களை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் தனது குடிமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதேவ‍ேளை, அறுகம்பை பகுதி உட்பட நாட்டின் பல பகுதிகளின் பாதுகாப்பும் நேற்றைய தினம் பலப்படுத்தப்பட்டிருந்தது.

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...