‘உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்’: ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் நான்காவது சந்திப்பு!

Date:

‘உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்’ நிகழ்வின் நான்காவது நிகழ்வு எதிர்வரும் 10.10.2024 அன்று வியாழக்கிழமை மு.ப. 9.30 முதல் பி.ப. 1.30 வரை இடம்பெற இருக்கின்றது என்பதை ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் பின்வரும் இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதன் மூலமாக அல்லது IMO ஊடாக அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் சவூதி அரேபியாவுக்கான இலங்கையின் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களுடன் நேரடியாக உரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து சவூதி அரேபியாவில் வாழ்கின்ற சகல பிரஜைகளும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவருடன் நேரடியாகப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கில் ரியாதில் உள்ள இலங்கை தூதரகம் ‘உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்’ என்ற பெயரில் சமூகத்தை நோக்கிய ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது.

ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்தப் புதிய முன்னெடுப்பினை இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் கட்டியெழுப்பப்பட்டு 50 ஆண்டு பூரணமாவதைக் கொண்டாடுவதுடன் அறிமுகப்படுத்துகிறது.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...