‘உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்’: ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் நான்காவது சந்திப்பு!

Date:

‘உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்’ நிகழ்வின் நான்காவது நிகழ்வு எதிர்வரும் 10.10.2024 அன்று வியாழக்கிழமை மு.ப. 9.30 முதல் பி.ப. 1.30 வரை இடம்பெற இருக்கின்றது என்பதை ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் பின்வரும் இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதன் மூலமாக அல்லது IMO ஊடாக அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் சவூதி அரேபியாவுக்கான இலங்கையின் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களுடன் நேரடியாக உரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து சவூதி அரேபியாவில் வாழ்கின்ற சகல பிரஜைகளும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவருடன் நேரடியாகப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கில் ரியாதில் உள்ள இலங்கை தூதரகம் ‘உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்’ என்ற பெயரில் சமூகத்தை நோக்கிய ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது.

ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்தப் புதிய முன்னெடுப்பினை இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் கட்டியெழுப்பப்பட்டு 50 ஆண்டு பூரணமாவதைக் கொண்டாடுவதுடன் அறிமுகப்படுத்துகிறது.

 

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...