தேங்காய் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Date:

தற்போது சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலையானது அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று தற்போது 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

நகர்ப்புறங்களை அண்மித்த பகுதிகளில் குறைந்த விலையில் தேங்காய் விற்பனை செய்வதற்கான விசேட வேலைத்திட்டத்தை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கவுள்ளதாகத் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் சில ஊழல் அதிகாரிகளின் செயற்பாடுகளினால் தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதம அழைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொறு ஆண்டும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேங்காய் உற்பத்தி குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் உள்ளூர் தேங்காய் நுகர்வுக்கு முக்கிய வாய்ப்பு அளிக்கப்பட்டு ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

ஆனால் அதிகாரத்தின் சில ஊழல் அதிகாரிகள் கடத்தல்காரர்களுடன் இணைந்து தேங்காய் ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.

தற்போது இந்த நாட்டில் தேங்காய் ஒன்றின் விலை 160 ரூபாவாக உள்ளது. ஆனால், இதன் விலை 170, 180 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...