நாட்டில் அச்சுறுத்தல் நிலைமைகள் இல்லை: பாதுகாப்பு அமைச்சு

Date:

சுற்றுலாப் பயணத் தளங்கள் மற்றும் நாட்டின் பிரதான பகுதிகளில் குண்டுத்தாக்குதல்கள் உட்பட எந்தவொரு ஆபத்தான அச்சுறுத்தல்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் பிரதான சுற்றுலாத்தளங்களை மையப்படுத்திய தாக்குல்கள் நடத்தப்படவுள்ளதாக எமக்கு புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கு ஒக்டோபர் முதல் வாரத்திலேயே தகவல்கள் கிடைத்திருந்தன.

இதனையடுத்து தேசிய பாதுகாப்புச் சபை உடனடியாக கூட்டப்பட்டு எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும், இவ்விடயம் சம்பந்தமாக வெளிநாடு தனது பயணிகளுக்காக முன்னெச்சரிக்கையை விடுத்திருந்தது. அதனையடுத்தே விடயம் பகிரங்கமானது.

ஆனால் அதற்கு முன்னதாகவே சுற்றுலாத்தளங்கள் உட்பட நாட்டின் பிரதான பகுதிகள் அனைத்துமே பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

தற்போது அந்த நிலைமை மேலும் தீவிரமாக்கப்பட்டு பாதுகாப்பு அதியுச்சமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு பிரஜைகளும் அச்சமடைய வேண்டியதில்லை.

நாட்டில் அச்சுறுத்தல் நிலைமைகள் அனைத்தும் களையப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் உட்பட நாட்டின் பிரஜைகள் அனைவரும் சுதந்திரமாக நடமாட முடியும் என்றார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...