நாளைய தினம் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Date:

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் நேற்று மற்றும் இன்று மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் தேவையான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை 16 மாவட்டங்களில் 69 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 158, 391 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலையால் இதுவரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 240 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 1,753 குடும்பங்களைச் சேர்ந்த 9, 663 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...