இலங்கைக்கான சீன தூதுவரை சந்தித்து பிரதமர் கலந்துரையாடல்

Date:

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீனக் குடியரசின் தூதுவர் Qi Zhenhong ஆகியோருக்கிடையில் இன்று (30) பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கையின் வெள்ள நிவாரண முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்த தூதுவர் Qi Zhenhong, இதனூடாக இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால தொடர்புகள் வலுப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த தீர்மானம் மிக்க காலப்பகுதியில் சீனக் குடியரசின் தாராள மனப்பான்மை மற்றும் ஒத்துழைப்புக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான முதலீட்டு சந்தர்ப்பங்களை பலப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உட்பட இரு நாடுகளினதும் ஒத்துழைப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...