இலங்கைக்கான சீன தூதுவரை சந்தித்து பிரதமர் கலந்துரையாடல்

Date:

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீனக் குடியரசின் தூதுவர் Qi Zhenhong ஆகியோருக்கிடையில் இன்று (30) பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கையின் வெள்ள நிவாரண முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்த தூதுவர் Qi Zhenhong, இதனூடாக இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால தொடர்புகள் வலுப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த தீர்மானம் மிக்க காலப்பகுதியில் சீனக் குடியரசின் தாராள மனப்பான்மை மற்றும் ஒத்துழைப்புக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான முதலீட்டு சந்தர்ப்பங்களை பலப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உட்பட இரு நாடுகளினதும் ஒத்துழைப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...