பசுபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க அட்மிரல் நாளை இலங்கைக்கு விஜயம்

Date:

பசுபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க கடற்படை தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் நாளை வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டிற்குப் பின்னர் உயர் மட்ட கடற்படை அதிகாரியொருவரின் வருகையாக இந்த விஜயம் அமைந்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, அட்மிரல் கோஹ்லர் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த, நெகிழ்ச்சியான, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான வலுவான பங்காளித்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவார் என அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்கள், கடல்சார் விழிப்புணர்வு மற்றும் பேரிடர் பதிலளிப்பு போன்றவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...