பழையவர்கள் ஒதுங்குங்கள் புதியவர்களுக்கு இடம் வேண்டும்

Date:

பழையவர்கள் ஒதுங்குங்கள் புதியவர்களுக்கு இடம் வேண்டும் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் புது முகங்களுடன் தமிழரசுக் கட்சி களமிறங்கவுள்ளது.

அதனை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.

வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (06) இடம்பெற்ற வேட்பாளர் தெரிவு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார் .

யாழ்ப்பாணத் தெர்தல் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் நானும் போட்டியிடவுள்ளளோம். ஏனைய 7 பேரும் புதியவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

மேலும், இம்முறை மக்கள் எதிர்ப்பார்க்கும் மாற்றத்திற்கு ஏற்ப புது முகங்களுடன், இயைவர்களுடன் எமதுக் கட்சி தேர்தலில் களமிறங்கியுள்ளது என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...