பிரபல சமூக கவிஞர் புத்தளம் மரிக்காரின் ‘இரகசியங்கள்’ மற்றும் ‘மைத்துளிகள் மரணிப்பதில்லை’ என்ற இரு நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை 5ஆம் திகதி புத்தளம் இஸ்லாஹியா மகளிர் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.
சிறப்பான இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட் அவர்களும் விசேட அதிதிகளாக வலம்புரி கவிதா வட்டம் தலைவர் கவிமணி N.நஜ்முல் ஹுசைன், ஓய்வு நிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் இஸட். என் சன்ஹிர், தமிழ்த்தென்றல் அலி அக்பர், சிரேஷ்ட சட்டத்தரணி கவிஞர் ரஷீத் இம்தியாஸ், வலம்புரி கவிதா வட்டம் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் மின்ஹாஜ் (இஸ்லாஹி)ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
கௌரவ அதிதிகளாக கலாபூஷணம் ஜவாத் மரிக்கார் உட்பட இன்னும் பலர் கலந்துகொள்வதோடு பிரபல கவிஞரும் எழுத்தாளருமான ஒலிபரப்பாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் இந்நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கவுள்ளார்.