பொதுத் தேர்தல்: நாடு முழுவதும் 13,412 வாக்குச் சாவடிகள்

Date:

நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், 2,034 நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்களாக செயற்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 1,765,351 வாக்காளர்களுக்கு வசதியாக 1,204 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

ஆகக் கூடுதலாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட கம்பஹா மாவட்டத்தில் 1,212 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதோடு, இம்மாவட்டத்தில் 1,881,129 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 1,024,240 வாக்காளர்களுக்காக 735 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட உள்ளன.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...