பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை

Date:

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறப்படும் உத்தியோகபூர்வமற்ற முகப்புத்தக பக்கம் தொடர்பில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

குறித்த முகப்புத்தக பக்கம், உரிமை கோரப்படாத பயணப் பொதிகள் விற்பனைக்கு உள்ளதாகவும் மேலும் பல தவறான தகவல்களையும் பரப்பி வருவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அத்துடன், அந்த முகப்புத்தக பக்கத்திலுள்ள ஒரு இடுகையில் பல்வேறு பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் நிரப்பப்பட்ட ஒரு பயணப்பொதி 639 ரூபாவுக்கு விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி எந்த ஒரு பயணப் பொதியும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக விற்பனை செய்யப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறும், இந்த மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

 

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...