அரச வாகனங்கள், சொத்துகள் தொடர்பில் புகாரளிக்க அவசர இலக்கம்

Date:

அரச வாகனங்கள் மற்றும் சொத்துகள் ஆகியன தவறாக பயன்படுத்தப்பட்டால் அல்லது திருடப்பட்டால், அது தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய அவசர இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

துல்லியமான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு பண ஊக்கத்தொகை வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டமானது, பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதையும் அரச சொத்துகளை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

 

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...