வெளிநாட்டு தூதரகங்களில் பணிபுரியும் அரசியல்வாதிகளின் உறவினர்கள் தொடர்பில் அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தல்!

Date:

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கை அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பாக முழுமையான அறிக்கையை தயாரிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

புதிதாக நாட்டில் ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம், வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கை அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடனடியாக நாட்டுக்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்திருந்தது.

அதற்கிணங்க, குறித்த நபர்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை தயாரிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைவாக குறித்த அறிக்கை தற்போது வெளிவிவகார அமைச்சினால் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை கிடைத்ததும் வெளியுறவுத்துறை அமைச்சர், நியமனங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...