ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம்: கனடாவின் மோசமான குற்றச்சாட்டை மறுத்தது இந்தியா

Date:

கனடாவில் பிரபல சீக்கிய ஆர்வலர்  ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஓட்டு வங்கி அரசியல் நடத்தி வருகிறார் என இந்தியா, இன்று கனடா அரசுக்கு பதிலடி தந்துள்ளது.

ஜூன் 2023ல் காலிஸ்தான் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர்ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் காட்டி இருந்தார்.அப்போது முதல் இந்தியா கனடாவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

விரிசல் தொடர்ந்து வரும் இந்தவேளையில், இந்தியா உயர் அதிகாரி சஞ்சய் குமார் வர்மா மீது மோசமான குற்றச்சாட்டுகளை கனடா தெரிவித்துள்ளது. கனடாவின் இந்த குற்றச்சாட்டை அபத்தமானது என இந்தியா நிராகரித்துள்ளது.

இந்திய உயர் அதிகாரி சஞ்சய் குமார் வர்மா, பலதுறைகளில் பணியாற்றி, நீண்ட அனுபவம் கொண்ட மூத்த முக்கியமான அதிகாரி ஆவார்.

ஜப்பான், சூடான், இத்தாலி, துருக்கி, வியட்நாம் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இந்தியாவின் சிறப்பு துாதராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர்.அரசுத் துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.

சமீபத்தில லாவோஸ் நாட்டிற்கு ஆசியான் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போதுகூட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இரு தரப்பு உறவு குறித்து பேசியுள்ளார்.

இந்த நிலையில் கனடா எங்களது அதிகாரிகளை ஆதாரம் இல்லாமல் கேவலப்படுத்துவதாகவும், தனது மண்ணில் காலிஸ்தானி பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தத் தவறியதை நியாயப்படுத்த மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...