பாரம்பரிய அரபு எழுத்தணிக் கலையை கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? விண்ணப்பியுங்கள்..!

Date:

முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகளில் முக்கிய இடம் வகிக்கின்ற அரபு எழுத்தணிக் கலையை ஊக்குவிக்கும் முகமாக இரண்டு நாள் அரபு எழுத்தணி பயிற்சி வகுப்புகள் இரத்மலானையில் எதிர்வரும் 26-27 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

அரபு எழுத்தணிக் கலையில் ஆர்வமுள்ள கொழும்பு மற்றும் அண்மித்த அரபு கல்லூரி ஆண் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

இலங்கை அரபு எழுத்தணி கலைச் சங்கம்   ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இப்பயிற்சி நிகழ்வில் வளவாளர்களாக Ash Shaikh Junaid Naseer Naleemi  (SLTS, BA, Dip in Edu, M.Ed), Al Alim S. Majeem Yousufi (India), Lecturer Dharul Uloom Al-Hashimiyyah Arabic College, Nawalapitiya, Al Aalim Al Faazil N.M. Silmy (Noori, Saahdhi) Usthaz Rawlathul Jannah Arabic College (Muthur), Ash Shaikh Moosa Kaleem Naleemi (SLTS, BA, Dip in Edu, M.Ed) கலந்துகொள்வர்.

இணைந்து கொள்ள விரும்புகின்றவர்கள்;
*உங்கள் பெயர்
*கல்வி கற்கும் தரம்
 *கற்கும் அறபுக் கல்லூரியின் பெயர்
 *உங்கள் சுய முகவரி

ஆகியவற்றை 0778852767 எனும் what’s app இலக்கத்திற்கு 04/10/2024 ஆம் திகதிக்கு முன் அனுப்புமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் சேவைக் கட்டணம்: 1000/-அறவிடப்படுவதுடன் தங்குமிட வசதி செய்து தரப்பட மாட்டாது என்பதுடன் பங்கு பற்றுவோர் தமது மத்ரசாவிலிருந்து அல்லது வீட்டில் இருந்து வந்து போக வேண்டும் எனவும் ஏற்பாட்டாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...