2024 நாடாளுமன்ற தேர்தல்; வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்!

Date:

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (04) காலை முதல் ஆரம்பமாகிறது.

வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி இன்று முதல் ஒக்டோபர் 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும்.

வேட்புமனு தாக்கல் செய்யப்படும் முதல் நாளான இன்று முதல் இறுதி நாள் வரை எவ்விதமான ஊர்வலங்களோ, பேரணிகளோ மற்றும் குழுக்களாக ஒன்றுகூடலோ முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், பொதுத் தேர்தலுடன் சம்பந்தப்பட்ட முக்கிய நிறுவனங்களின் பிரதானிகளுடனும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்வதிலிருந்து தேர்தல் நடைபெறும் தினம் வரை மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் அரசாங்க அச்சகத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில், இதுவரை 37 குழுக்கள் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதாக அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

11 ஆம் நண்பகல் 12.00 மணிக்குப் பிறகு, வேட்புமனுத் தாக்கல் மற்றும் அனைத்து குழுக்களுக்கும் ஆட்சேபனை தெரிவிக்க ஒரு மணி நேரம் அனுமதிக்கப்படும். தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும், புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21 ஆம் திகதி கூடும்

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...