2024 பொதுத்தேர்தல் ; தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு

Date:

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான திகதி குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,

மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பிரிவின் ஏனைய அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 4 ஆகிய இரு திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.

மேலும், அரச அலுவலகங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் பணிபுரிபவர்கள் நவம்பர் 1 மற்றும் நவம்பர் 4 ஆகிய இரு திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்டுள்ள திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களும் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 8 ஆகிய இரு திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...