எல்பிட்டிய தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி

Date:

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பு நேற்று இடம்பெற்றது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள் 1 சுயேட்சை குழு போட்டியிட்டன.

தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் முடிவுகள் வெளியாகியுள்ளன.

7 உள்ளூராட்சி பிரிவுகளில் 17,295 வாக்குகளை பெற்று தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3,597 வாக்குகளை பெற்று, 3 ஆசனங்களை வென்றுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 2,612 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை வென்றது.

அத்துடன், பொதுமக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி 2,612 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

சுயேட்சை குழு 2,568 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி 1,350 வாக்குகளை பெற்று, ஒரு ஆசனத்தை வென்றது.

தேசிய மக்கள் கட்சி 521 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை வென்றுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...