இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்த ஈரான்?

Date:

எங்களுடைய இராணுவ விமானங்கள் ஈரானுடைய இராணுவ இலக்குகளுக்கு பாதுகாப்பாக திரும்பிவிட்டன என்று இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

ஈரானில் உள்ள பல இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் இன்று காலை வான்வழித் தாக்குதலை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன

ஒக்டோபர் 1ஆம் திகதி ஈரானின் கிட்டத்தட்ட 200 ஏவுகணைத் தாக்குதல்கள் மீதான தாக்குதல் உட்பட, பல மாதங்களாக ஈரானிய ஆட்சியின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

அதன்படி ஈரான் தலைநகரின் மேற்கு மற்றும் தென்மேற்கில் அமைந்துள்ள ராணுவ தளங்களை குறிவைத்து இந்த வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், தாக்குதல்களின் குறிப்பிட்ட இலக்குகள் குறித்து இஸ்ரேல் இன்னும் தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை.

இதற்கிடையில்,  இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரப்போவதாக தகவல்கள் வருகின்றன. ஈரான் நாட்டு அரசு தனது ராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டு உள்ளதாம். போர் தொடர்பாக முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாம்.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...