ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாடு – காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை

Date:

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஜம்மு – காஷ்மீர் சட்டசபைக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் சட்டசபை தேர்தல் நடந்தது.

இதில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி போட்டியிட்டது. இக்கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.

வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே, தேசிய மாநாடு அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஜம்மு பகுதியில் உள்ள தொகுதிகளில் பாஜகமுன்னிலையில் இருந்தது.

இறுதி நிலவரப்படி, தேசிய மாநாடு கட்சி 42 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்த கூட்டணி காஷ்மீரில் புதிய அரசை அமைக்க உள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...