நூற்றாண்டு தாண்டிய புத்தளம் காசிமிய்யாவுக்கு புதிய அதிபர்!

Date:

இலங்கையின் அரபுக் கல்லூரிகளின் வரிசையில் பழமை வாய்ந்த அரபுக் கல்லூரியாக கருதப்படுகின்ற, புத்தளம் நகரில் அமைந்திருக்கின்ற காசிமிய்யா அரபுக்கல்லூரி, 100 ஆண்டுகளைத் தாண்டி இயங்கி வருகின்ற அரபுக்கல்லூரியாகும்.

இக் கல்லூரியில் நீண்டகாலமாக கடமை புரிந்த முன்னாள் புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க். அப்துல்லாஹ்
மஹ்மூத் ஆலிம் அவர்கள் சுகவீனம் காரணமாக தன்னுடைய அதிபர் பதவி பொறுப்பை விட்டு நீங்கியதைத் தொடர்ந்து இப்பொறுப்பை புத்தளத்தை பிறப்பிடமாகக் கொண்ட இஸ்லாமிய அறிஞர், பிரபல எழுத்தாளர், பேச்சாளர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) அவர்கள் கல்லூரியின் அதிபர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

மார்க்க அறிவுத்துறையிலும் சமூகப் பணிகளிலும் நீண்டகால அனுபவமும் முதிர்ச்சியும் கொண்ட அஷ்ஷெய்க். மின்ஹாஜ் அவர்கள், எலவே புத்தளம் ஜம்இய்யதுல் உலமா தலைவராகவும் இஸ்லாஹியா அரபுக்கல்லூரியின் விரிவுரையாளராகவும் கடமையாற்றியதோடு இன்னும் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துச் செல்கின்ற ஒருவராவார்.

புதிய பதவியும் பொறுப்பும் அவருடைய பொறுப்பை இன்னும் சிறப்பாக செய்வதற்கும், நூற்றாண்டு தாண்டிய காசிமியா அரபுக்கல்லூரியின் மற்றொரு மைல் கல்லை அவருடைய பதவிக்காலத்தில் எட்டவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...