பசுபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க அட்மிரல் நாளை இலங்கைக்கு விஜயம்

Date:

பசுபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க கடற்படை தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் நாளை வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டிற்குப் பின்னர் உயர் மட்ட கடற்படை அதிகாரியொருவரின் வருகையாக இந்த விஜயம் அமைந்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, அட்மிரல் கோஹ்லர் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த, நெகிழ்ச்சியான, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான வலுவான பங்காளித்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவார் என அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்கள், கடல்சார் விழிப்புணர்வு மற்றும் பேரிடர் பதிலளிப்பு போன்றவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...