புத்தளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய நவராத்திரி திருவிழா நிகழ்வுகள் ஆரம்பம்.

Date:

புத்தளம் மன்னார் வீதியில் அமைந்திருக்கின்ற மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த நவராத்திரி திருவிழா நிகழ்வுகள் வியாழக்கிழமை (03) ஆரம்பிக்கப்பட்டன.

இந்த திருவிழாவையொட்டி தொன்று தொட்டு, முதல் நாள் உபயத்தை வழங்கி வருகின்ற புத்தளம் நடராஜ தேவர் குடும்பத்தினர் அவர்களது புத்தளம் பிரதான வீதியில் அமைந்திருக்கும் முன்னாள் வியாபார நிலையத்திலிருந்து ஸ்ரீ முத்து மாரியம்மனுக்கு பட்டு சாத்தும் பொருட்டு சீர்தட்டு கொண்டு செல்லும் நிகழ்வு வியாழக்கிழமை (03) காலை இடம்பெற்றது.

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு செல்கின்ற வழியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்துக்கும் சென்ற பக்தர்கள் அங்கு ஸ்ரீ சித்தி விநாயகரையும் வழிபட்டு விட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை செனறடைந்தனர்.

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் அதன் பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தாராம குருக்கள் தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதனையடுத்து ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அதன் பிரதம குரு அம்பலவாணன் குருக்கள் தலைமையில் நவராத்திரி திருவிழாவின் முதல் நாள் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

Popular

More like this
Related

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...