2024 மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவை, வீழ்த்தி கிரிக்கெட் உலகை மிரள வைத்த தென்னாப்பிரிக்க அணி

Date:

2024 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை, தென்னாப்பிரிக்க மகளிர் அணி வீழ்த்தி கிரிக்கெட் உலகை மிரள வைத்தது. கடைசி மூன்று முறையும் ஆஸ்திரேலியா மகளிர் அணி தான் மகளிர் டி20 உலக கோப்பையை வென்றது.

ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் பெத் மூனி 42 பந்துகளில் 44 ரன்களும், டகிலா மெக்கிராத் 33 பந்துகளில் 27 ரன்களும், எலிஸ் பெர்ரி 23 பந்துகளில் 31 ரன்களும், போப் லிட்ச்ஃபீல்டு 9 பந்துகளில் 16 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.

அடுத்து தென்னாப்பிரிக்கா அணி சேசிங் செய்தது. அந்த அணி 135 ரன்கள் என்ற இலக்கை எட்டுவது சிரமம் என்று பலரும் எண்ணினர். ஆனால், துவக்க வீராங்கனை லாரா உல்வார்ட் நிலையாக நின்று ஆடினார். மற்றொரு துவக்க வீராங்கனை டாஸ்மின் பிரிட்ஸ் 15 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மூன்றாம் வரிசையில் இறங்கிய ஆனேக் போஸ்ஷ் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 48 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். கேப்டன் லாரா உல்வார்ட் 37 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து 15வது ஓவரில் ஆட்டம் இழந்தார்.

தென்னாப்பிரிக்க அணி 17.2 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

Popular

More like this
Related

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம்

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல...

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி:கெஹெலியவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல்...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட முகமது சுஹைல் விடுதலை!

சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவை வெளியிட்டதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 9 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளுக்கு எதிர்வரும்...