பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை

Date:

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறப்படும் உத்தியோகபூர்வமற்ற முகப்புத்தக பக்கம் தொடர்பில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

குறித்த முகப்புத்தக பக்கம், உரிமை கோரப்படாத பயணப் பொதிகள் விற்பனைக்கு உள்ளதாகவும் மேலும் பல தவறான தகவல்களையும் பரப்பி வருவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அத்துடன், அந்த முகப்புத்தக பக்கத்திலுள்ள ஒரு இடுகையில் பல்வேறு பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் நிரப்பப்பட்ட ஒரு பயணப்பொதி 639 ரூபாவுக்கு விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி எந்த ஒரு பயணப் பொதியும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக விற்பனை செய்யப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறும், இந்த மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

 

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...