பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டை நாளை முதல் விநியோகம்

Date:

பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படும். எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதியுடன் வாக்காளர் அட்டை விநியோக பணிகள் நிறைவடையும்.

பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பவர் மாதம் 14 (வியாழக்கிழமை) நடைப்பெறவுள்ளது.

வாக்கெடுப்புக்கான சகல பணிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு நிறைவு செய்துள்ளது.

இதற்கமைய இம்முறை  அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்பில் 5,464 வேட்பாளர்கள், சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3357 வேட்பாளர்கள் என்ற அடிப்படையில் 8821 பேர் போட்டியிடுகின்றனர்.

இதற்கமைய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று (26) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படுவதால் தபால் சேவையாளர்களின் சகல விடுமுறைகளும் பொதுத்தேர்தல் நிறைவடையும் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை நாளை முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை தபால்மூலம் விநியோகிக்கப்படும்.

இம்முறை பொதுத்தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கு 759,210 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்ற நிலையில், 2,1160 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 738,050 அரச உத்தியோகஸ்த்தர்கள் தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் புதன்கிழமை (30) நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...