வெளிநாட்டு தூதரகங்களில் பணிபுரியும் அரசியல்வாதிகளின் உறவினர்கள் தொடர்பில் அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தல்!

Date:

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கை அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பாக முழுமையான அறிக்கையை தயாரிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

புதிதாக நாட்டில் ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம், வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கை அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடனடியாக நாட்டுக்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்திருந்தது.

அதற்கிணங்க, குறித்த நபர்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை தயாரிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைவாக குறித்த அறிக்கை தற்போது வெளிவிவகார அமைச்சினால் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை கிடைத்ததும் வெளியுறவுத்துறை அமைச்சர், நியமனங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...