அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு; ட்ரம்ப் முன்னிலை!

Date:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து குடியரசு கட்சி தலைவர் டொனால்ட் டிரம்ப்  முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இண்டியானா, கென்டக்கி, மேற்கு வெர்ஜினியா, டென்னெஸ்சீ, தெற்கு கரோலினா, மிஸ்சிஸ்சிப்பி, புளோரிடா, ஒக்லஹோமா போன்ற மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் முன்னிலைப் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில்  ஜனாதிபதி தேர்தல்  முடிவு எப்படி இருக்கும் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கின்றது.

தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் டிரம்ப்பை கமலா ஹரிஸ் சிறிய வித்தியாசத்தில் முந்திவந்தாா். இருந்தாலும், கடைசி நேரத்தில் இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் கடுமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எலக்டோரல் காலேஜ் வரும் டிசம்பர் மாதம் 17ம் திகதி வாக்களிப்பார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் யார் எத்தனை மாகாணங்களில் வென்றுள்ளார்களோ அதைப் பொறுத்தே இந்த எலக்டோரல் காலேஜ் முடிவுகள் இருக்கும். டிசம்பர் 17ம் திகதி பதிவாகும் எலக்டோரல் காலேஜ் வாக்குகள் ஜனவரி 6ம் திகதி எண்ணப்பட்டு முடிவு இறுதி செய்யப்படும்.

அதாவது ஜனவரி 6ம் திகதி தான் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதனை தொடர்ந்து ஜனவரி 20ம் திகதி புதிய ஜனாதிபதி பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...